ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின் இதயத்தின் கிளையினில் பூத்தாளே அடி முதல் நுனிவரை அவளது நினவுகள் ஆஹா அழகாய்த் தொலைந்தேனே
சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும் காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா
மேகம் போலே நான் மேலே பறந்தேன் வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன் காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன் நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன் (சின்னச் சின்ன..)
கொலுசுக்குள் வந்துவிடவா நடக்கையில் சத்தமிடவா உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே கம்மலினில் தொங்கிவிடவா அங்கேயேத் தங்கிவிடவா உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே