வா வா வா கண்ணா வா வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா உனக்கொரு சிறுகதை நான் இனிமையில் தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில் உனக்கொரு சிறுகதை நான் தொடத் தொட தொடர்கதை தான் உருகி உருகி இதைப் படித்திட வா வா வா வா கண்ணா வா வா வா வா — வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை நாலு கண்கள் பாதை போட நாகரீகம் தொடர்ந்தது — வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா எனக்கொரு சிறுகதை நீ இனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில் எனக்கொரு சிறுகதை நீ தொடத் தொட தொடர்கதை நீ உருகி உருகி உனைப் படித்திட வா வா வா அன்பே வா வா வா வா — ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே ராக வீணை போலவே நானும் வந்து போகவோ தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ நானும் நீயும் காதல் கைதி எண்ண எண்ண இனிக்குது — வா வா வா அன்பே வா தா தா தா அமுதம் தா — காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான் கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான் ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன் தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன் தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம் மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம் பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட — வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா எனக்கொரு சிறுகதை நீ இனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில் எனக்கொரு சிறுகதை நீ…ஆ… தொடத் தொட தொடர்கதை நீ…ஆ… உருகி உருகி உனைப் படித்திட வா வா வா அன்பே வா வா வா வா